
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பிணையை தில்லி உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை பிணை வழங்கியது. இதை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தில்லி உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை இதை விசாரித்தது. வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் வரை தில்லி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால், கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியில் வருவது சிக்கலானது.
இதை எதிர்த்து, கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை காத்திருக்கலாம் என்று கூறி வழக்கை ஜூன் 26-க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பிணையை நிறுத்திவைப்பதாக தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் முறையாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறி கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை நிறுத்திவைத்துள்ளது. இந்த வழக்கின் இறுதி உத்தரவு வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.