ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்குப் பிணை: உச்ச நீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்றத்தில் பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்குப் பிணை: உச்ச நீதிமன்றம்

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்குப் பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிறையில் இருந்தார். இந்த வழக்கில் பிணை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் மனு தாக்கல் செய்தார். இவருடைய மனுவுக்கு அமலாக்கத் துறை தில்லி உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. தில்லி உயர் நீதிமன்றம் இவருக்குப் பிணை வழங்க மறுத்தது.

இதையடுத்து, பிணை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார் சஞ்சய் சிங். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, சஞ்சய் சிங்கின் பிணைக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, சஞ்சய் சிங்குக்குப் பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கு குறித்து எதுவும் பேசக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

இதே வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in