சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு அதிகரிப்பு

சல்மான் கான் வீட்டில் பாதுகாப்பை அதிகரிக்கக் கூறி மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு
சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடுANI

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையின் பந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார் சல்மான் கான். இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் அவரது வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு காவல் துறை சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக சல்மான் கான் வீட்டில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சல்மான் கான் வீட்டில் பாதுகாப்பை அதிகரிக்கக் கூறி மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சல்மான் கான் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் வீட்டில் பாதுகாப்பை அதிகரிக்க மும்பை காவல் துறை ஆணையரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் சல்மான் கானுடன் பேசினேன். அரசு தன்னுடன் உள்ளது எனவும், அவர் கவலைப்படத் தேவையில்லை எனவும் அவரிடம் கூறியுள்ளேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in