மீண்டும் ஏற்றம் கண்ட பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 1500-க்கும் மேற்பட்ட புள்ளிகளும், நிஃப்டி 400-க்கும் மேற்பட்ட புள்ளிகளும் உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தை உயர்வு!
பங்குச் சந்தை உயர்வு!ANI

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த நிலையில் பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் வெளியானது. இதில், பாஜக தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1500-க்கும் மேற்பட்ட புள்ளிகள் உயர்ந்து 73587 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 400-க்கும் மேற்பட்ட புள்ளிகள் உயர்ந்து 22353 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது இருமுறை பங்குச் சந்தை சரிந்தது. எதிர்பார்த்த அளவில் பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெறாததே இதற்கு காரணமாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in