வாக்கு எண்ணிக்கை எதிரொலி: இந்தியப் பங்குச் சந்தையில் பெரிய பாதிப்பு!

சென்செக்ஸ் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிகளும், நிஃப்டி 1700-க்கும் மேற்பட்ட புள்ளிகளும் குறைந்துள்ளது.
இந்தியப் பங்குச் சந்தையில் பெரிய பாதிப்பு
இந்தியப் பங்குச் சந்தையில் பெரிய பாதிப்புANI

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இந்தியப் பங்குச் சந்தை மிகப்பெரியச் சரிவை சந்தித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. 96.8 கோடி வாக்காளர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருந்த நிலையில், 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் நடைபெற்ற தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்நிலையில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிகள் குறைந்து 71093 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 1700-க்கும் மேற்பட்ட புள்ளிகள் குறைந்து 21556 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது.

சில நாள்களுக்கு முன்பு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தில் வர்த்தமாகி வந்த நிலையில், இன்று கடும் சரிவை சந்தித்து வருகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பாஜக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெறாததே இதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in