ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் 5 இடங்களில் சோதனை

குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவர் சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் 5 இடங்களில் சோதனை
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் 5 இடங்களில் சோதனை

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1-ல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வரும் நிலையில் இது தொடர்பாக தமிழ்நாட்டில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவர் சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மண்ணடி விநாயகர் கோவில் தெரு, மண்ணடி மூட்டைக்காரன் தெரு, திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு விடுதி, ராமநாதபுரம் உட்பட தமிழ்நாட்டில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

மேலும் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் தங்கியிருந்த இடம், அவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in