ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு

எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்.
பஜன் லால் சர்மா
பஜன் லால் சர்மாANI
1 min read

ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா தனது X தளத்தில், "எனது உடல்நிலை தொடர்பான பரிசோதனையை மேற்கொண்டேன். எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவர்களின் ஆலோசனையை முழுமையாகப் பின்பற்றுகிறேன், வரவிருக்கும் அனைத்து திட்டங்களிலும் காணொளி மூலம் பங்கேற்பேன்" என்றார்.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 217 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் அதில் செயலில் உள்ள வழக்குகள் 28 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை பதிவான மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 4,50,30,684 ஆகவும், அதில் செயலில் உள்ள வழக்குகள் 1,081 ஆகவும் உள்ளன.

ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 9 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.

logo
Kizhakku News
kizhakkunews.in