குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜன. 22 அன்று நடைபெற்றது. ராமர் சிலை முன்பு சிறப்புப் பூஜைகளை செய்து பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு இன்று முதன்முறையாக திரௌபதி முர்மு அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
முன்னதாக அவர் ஹனுமன் கார்ஹி கோயிலுக்கும் சென்றார்.