மன்மோகன் சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார்...
மன்மோகன் சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
ANI
1 min read

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமராக இருமுறை பதவி வகித்த மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இதையடுத்து மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக இந்தியா துக்கம் அனுசரிக்கிறது. சாதாரண பின்னணியில் இருந்து வந்த மன்மோகன் சிங், மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். நிதியமைச்சர் உள்பட பல்வேறு அரசாங்கப் பதவிகளிலும் பணியாற்றி, பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். பாராளுமன்றத்தில் அவருடைய பங்களிப்புகள் புத்திசாலித்தனமாக இருந்தன. நமது பிரதமராக, நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார் என்று பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in