சர்வாதிகாரத்துக்கு மக்கள் பதிலளிப்பார்கள்: கெஜ்ரிவால் மனைவி

"விசாரணை நிறைவடைந்துவிட்டது என்றால் அவரை ஏன் சிறைக்கு அனுப்பவில்லை?"
சுனிதா கெஜ்ரிவால் (கோப்புப்படம்)
சுனிதா கெஜ்ரிவால் (கோப்புப்படம்)

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சர்வாதிகாரத்துக்கு மக்கள் பதிலளிப்பார்கள் என கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21-ல் கைது செய்யப்பட்டார். மார்ச் 22-ல் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கியது.

இவரது அமலாக்கத் துறை காவல் மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டு கடந்த 28-ல் உத்தரவிடப்பட்டது. அமலாக்கத் துறை காவல் இன்றுடன் நிறைவடைந்ததன் மூலம், சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் தில்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறியதாவது:

"விசாரணை நிறைவடைந்துவிட்டது என்றால் அவரை ஏன் சிறைக்கு அனுப்பவில்லை? இந்த சர்வாதிகாரத்துக்கு நாட்டு மக்கள் பதிலளிப்பார்கள்" என்றார் அவர்.

நீதிமன்றக் காவல் உத்தரவைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in