ஜிஎஸ்டி மாற்றத்துக்கு பிஹார் தேர்தல் காரணமா?: ப. சிதம்பரம் | GST

ஜிஎஸ்டியில் 8 ஆண்டுகள் கழித்து மிகவும் தாமதமாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

ஜிஎஸ்டி மாற்றத்துக்கு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமா என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதம் 2 அடுக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. சிறப்பு அடுக்காக 40% என ஓர் அடுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான பொருள்கள் 18 சதவீதம் முதல் 5 சதவீதத்துக்குள் வருகிறது. இதன் காரணமாக பல்வேறு அன்றாடப் பொருள்களின் விலை குறையவுள்ளன.

ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சீர்திருத்தத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள ப. சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், இந்த மாற்றம் 8 ஆண்டுகள் மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

"பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரவேற்கத்தக்கது. ஆனால், 8 ஆண்டுகள் கழித்து மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று வரை அமலில் இருந்த ஜிஎஸ்டி மற்றும் அதன் விகிதங்கள் தொடக்கத்தில் அறிமுகம் செய்திருக்கக் கூடாது. ஜிஎஸ்டியிலுள்ள இந்த முறைக்கு எதிராக 8 ஆண்டுகளாகக் கருத்து தெரிவித்து வந்தோம். எங்களுடைய கோரிக்கைகள் அவர்களுடைய காதுகளைச் சென்றடையவில்லை.

இந்த மாற்றங்களைச் செய்ய அரசைத் தூண்டியது எது?

  • மந்தமான வளர்ச்சி

  • உயரும் வீட்டுக் கடன்

  • சரியும் குடும்ப சேமிப்பு

  • பிஹார் தேர்தல்

  • டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு

  • அல்லது இவை அனைத்தும்"

என்று ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது.

P Chidambaram | GST | GST Council | GST Rationalisation | Nirmala Sitharaman | Bihar Election | Bihar Assembly Election

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in