ஆனந்த் அம்பானி - ராதிகா
ஆனந்த் அம்பானி - ராதிகா

மகன் திருமணக் கொண்டாட்டம்: நீதா அம்பானி உருக்கம்

இந்தக் கொண்டாட்டம் நம் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு மதிப்பளிப்பதாகவும், நம் திறமையான படைப்பாளிகளின் கடின உழைப்பால்...
Published on

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம், ஜூலை 12 அன்று மும்பையில் நடைபெறவுள்ளது. திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று, குஜராத்தில் மார்ச் 1-3 தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் உலகின் முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் பிரபலங்களும் பங்கேற்றுள்ளார்கள்.

ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீதா அம்பானி, தன் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் உடனான திருமணம் குறித்து பேசியதாவது:

"ராதிகாவுடனான எனது இளைய மகன் ஆனந்தின் திருமணத்திற்கு வரும்போது, எனக்கு இரண்டு முக்கியமான வாழ்த்துகள் இருந்தன - முதலாவதாக, எங்கள் வேர்களைக் கொண்டாட விரும்பினேன். ஜாம்நகர் எங்கள் இதயங்களில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. குஜராத்தில் இருந்து நாங்கள் வருகிறோம். அங்குதான் முகேஷ் மற்றும் அவரது தந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கட்டினர். இந்த வறண்டப் பகுதியைப் பசுமையான நகரமாகவும் துடிப்பான சமூகமாகவும் மாற்றுவதன் மூலம் என் வாழ்க்கையைத் தொடங்கினேன்.

இரண்டாவதாக, இந்தக் கொண்டாட்டம் நம் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு மதிப்பளிப்பதாகவும், நம் திறமையான படைப்பாளிகளின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்” என்றார்.

பிரமாண்டமான திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் உலகெங்கிலும் இருந்து பல பிரபலங்கள் வரத்தொடங்கியுள்ளனர். ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் டவுன்ஷிப்பிற்கு அருகிலுள்ள ஜோக்வாட் கிராமத்தில், முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் உள்பட அம்பானி குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் கிராமவாசிகளுக்கு பாரம்பரிய குஜராத்தி உணவை வழங்கினர்.

logo
Kizhakku News
kizhakkunews.in