ரயில் பயணச்சீட்டு முன்பதிவு: இன்று (மே 1) முதல் புதிய விதிமுறைகள் அமல்!

ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் கைபேசி எண் பயன்பாட்டில் இருப்பதை பயனாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் உறுதிசெய்து கொள்ளவேண்டும்.
ரயில் பயணச்சீட்டு முன்பதிவு: இன்று (மே 1) முதல் புதிய விதிமுறைகள் அமல்!
1 min read

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடர்பான புதிய விதிமுறைகள் இன்று (மே 1) முதல் அமலுக்கு வந்துள்ளன.

காத்திருப்புப் பட்டியல்

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டு காத்திருப்புப் பட்டியலில் (Waiting List) இருந்தால், சம்மந்தப்பட்ட பயணி இனி பொதுப் பெட்டியில் மட்டுமே பயணிக்க முடியும். காத்திருப்புப் பட்டியல் பயணச்சீட்டை வைத்திருப்பவர்கள் முன்பதிவுப் பெட்டிகளில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

விதிகளை மீறி முன்பதிவுப் பெட்டிகளில் காத்திருப்புப் பட்டியல் பயணச்சீட்டுடன் பயணித்தால், சம்மந்தப்பட்ட பயணிக்கு அபராதம் (படுக்கை பெட்டி: ரூ. 250 மற்றும் ஏ.சி. பெட்டி: ரூ. 440) விதிக்கப்படும்.

ஒரு முறை கடவுச்சொல்

மேலும், ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும் அனைத்து ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகளுக்கும், முதலில் `ஒரு முறை கடவுச்சொல் (OTP)’ அனுப்பிவைக்கப்பட்டு, அது உறுதி செய்யப்பட்ட பிறகே பயணச்சீட்டை முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்படும்.

பயணச்சீட்டிற்கான கட்டணம் செலுத்துவதற்கு முன்பு `ஒரு முறை கடவுச்சொல்’ அனுப்பி வைக்கப்படும். இதனால், ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் கைபேசி எண் பயன்பாட்டில் இருப்பதை பயனாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

முன்பதிவு காலம்

மிக முக்கியமாக, பயணச்சீட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யவதற்கான காலம், இன்று முதல் 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

கட்டணம் திருப்பி அளித்தல் (Refund)

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணச் சீட்டுகளை ரத்து செய்யும் நிலையில், பிடித்தம் போக மீதிக் கட்டணம் இனி 48 மணி நேரத்தில் திரும்பக் கிடைக்கும்.

ரயில் புறப்படுவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன்பாகப் பயணச்சீட்டை ரத்து செய்தால் 75% கட்டணம் திரும்பக் கிடைக்கும், 24 முதல் 48 மணி நேரத்திற்குள்ளாக பயணச்சீட்டை ரத்து செய்தால் 50% கட்டணம் திரும்பக் கிடைக்கும், 24 மணி நேரத்திற்குள்ளாக பயணச்சீட்டை ரத்து செய்தால் கட்டணம் தொகை திரும்பக் கிடைக்காது.

தட்கல் முன்பதிவு

ரயிலின் மொத்த இருக்கைகளில் 30% இருக்கைகள் மட்டுமே இனி தட்கல் முன்பதிவு முறையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும்.

தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய, ஆதார் எண்ணை உறுதிப்படுத்துவதல் அவசியம். ஒரு ஐஆர்சிடிசி கணக்கின் மூலம் ஒரு நாளைக்கு இரண்டு தட்கல் பயணச்சீட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

மேலும், தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் நேரத்தில் முதல் 30 நிமிடங்கள் ஏஜெண்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பயணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in