மக்களவைத் தேர்தல் நிறைவு!

ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் நிறைவு!
ANI

மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏழாவது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தல் ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணிக்கு முன்பு வாக்கு செலுத்த வந்தவர்கள் மட்டும் மாலை 6 மணிக்குப் பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் ஏழாவது கட்டத்தில்தான் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒடிஷாவில் கடைசி கட்டமாக 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹிமாச்சல் பிரதேசத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்தவை. இந்த 6 எம்எல்ஏ-க்களும் மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தார்கள். எனவே, இந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவு ஹிமாச்சலில் காங்கிரஸின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவுள்ளது.

கடைசிக் கட்டத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • ஜார்க்கண்ட் - 60.14%

  • மேற்கு வங்கம் - 58.46%

  • உத்தரப் பிரதேசம் - 46.83%

  • சண்டிகர் - 52.61%

  • பிஹார் - 42.95%

  • ஒடிஷா - 49.77%

  • பஞ்சாப் - 46.38%

  • ஹிமாச்சலப் பிரதேசம் - 58.41%

ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in