டெல்லி, இமாச்சல், குஜராத் மக்கள் நம்மை முழுவதுமாக ஆதரித்திருக்கிறார்கள்.
மோடியின் மீதும் மோடியின் திட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்
தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி
பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி பாஜக அலுவலகம் வருகை.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு.
இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள இந்த அன்புக்கு நான் தலைவணங்குகிறேன்.
இந்திய வரலாற்றில் இது ஒரு புதிய மைல்கல். புதிய ஆற்றல், புதிய உத்வேகம், புதிய தீர்மானங்களுடன் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முன்னேறிச் செல்வோம் என நான் உறுதியளிக்கிறேன்.
ஓய்வில்லாமல் உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
7.4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அமித்ஷா
கர்நாடகாவின் ஹசன் தொகுதியில் மஜத வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி
பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை, மக்களின் நம்பிக்கையை இழந்ததால் பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்
இண்டியா கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம் என மமதா பானர்ஜி பேச்சு
"வயநாடு, ராய் பரேலி தொகுதி மக்களின் அன்புக்கு நன்றி. இரண்டில் எந்த தொகுதியை ராஜினாமா செய்வது என்று முடிவெடுக்கவில்லை. அனைத்து மாநில மக்களுக்கும் நன்றி. ஆனால், உத்தரப் பிரதேச மக்களுக்குத் தனிப்பட்ட வகையில் இண்டியா கூட்டணியின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
"இண்டியா கூட்டணித் தலைவர்களுடன் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது. அவர்களிடம் இது குறித்து விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். கூட்டணிக் கட்சியினரை மதிக்கிறோம். எனவே, அவர்களுடையக் கருத்தைக் கேட்காமல் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க மாட்டோம்" - ராகுல் காந்தி.
"மோடியும் அமித்ஷாவும் இந்த நாட்டை நிர்வகிப்பதை மக்கள் விரும்பவில்லை. மக்களின் இந்த தீர்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்தைக் காப்பாற்றியிருக்கிறது. இண்டியா கூட்டணி ஆட்சியமைப்பது குறித்து எங்கள் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து முடிவெடுப்போம். இந்த நாட்டின் விவசாயிகள், ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியலமைப்புச் சட்டத்தை காப்பற்றியிருக்கார்கள்." - ராகுல் காந்தி.
"பாஜக கட்சி மட்டுமல்லாமல் அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவர்களையும் எதிர்த்து வெற்றி நாங்கள் பெற்றுள்ளோம்." - ராகுல் காந்தி.
"மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் என மக்கள் கவலை கொண்டனர்" - கார்கே.
"இது மோடிக்கும் மக்களுக்கும் நடக்கும் போட்டி என நாங்கள் முன்பே கூறினோம். மக்கள் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை, பாரத் ஜோடோ நியாய யாத்திரை மூலம் கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்தார். மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்." - காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசியில் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பெஹ்ராம்பூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணமூல் வேட்பாளருமான யூசுப் பதான் வெற்றி. மக்களவைக்கான காங்கிரஸ் தலைவரும், 5 முறை எம்.பி.யுமான அதீர் ரஞ்சன் சௌதரி தோல்வியடைந்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையைத் தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் புகார் எழுப்பியதைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான காங்கிரஸ் குழு தேர்தல் ஆணையத்தைச் சந்தித்தது.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது:
"பிற்பகல் 2.30 மணிக்குப் பிறகு, தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் முடிவுகள் பதிவேற்றம் செய்யப்படுவதில் தாமதம் இருப்பதாக மாநிலப் பிரிவுகள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து தகவல் வந்துள்ளது. நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்பது இரண்டாவது புகார். நாங்கள் எதுவும் குற்றம்சாட்டவில்லை. தகவல்களைப் பகிர வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டுள்ளோம். எங்களுடையக் கருத்தைத் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. எந்தவொரு தகவலையும் பதிவேற்றம் செய்வதில் தாமதிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது" என்றார் அபிஷேக் மனு சிங்வி.
உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரலியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹாரில் வாக்கு எண்ணிக்கையைத் தாமதப்படுத்துவதாகவும், இது முற்றிலும் வழக்கத்துக்கு மாறானது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஜெ.பி. நட்டாவின் இல்லத்துக்குச் சென்றுள்ளார்கள்.
ராமர் கோயில் கட்டப்பட்ட அயோத்தி நகரைக் கொண்ட ஃபைஸாபாத் தொகுதியில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக பின்னடைவு. பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை விடவும் சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரிடம் சரத் பவார் பேசியதாகத் தகவல் வெளியான நிலையில், தான் இதுவரை யாரிடமும் பேசவில்லை என அவர் மறுத்துள்ளார்.
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான சசிதரூர் 15000 வாக்கு வித்தியாசத்தில் பாஜக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரைத் தோற்கடித்தார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், இண்டியா கூட்டணியிலுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவை அழைத்துப் பேசியுள்ளதாகத் தகவல்.
பாஜக 272 இடங்களுக்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடுவின் தேவை அதிகம். இந்தச் சூழலில் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு சென்றுள்ளதாகத் தகவல்.
சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ல் ஆந்திர முதல்வராகப் பதவியேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுயேட்சையாகப் போட்டியிட்ட, சிறையில் உள்ள 31 வயது காலிஸ்தான் ஆதரவு மதபோதகர் அம்ரித்பால் சிங் 1,20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைஸாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
சமாஜ்வாதி - பாஜக வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 3,186. நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 2,922.
திரிச்சூரில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி 71 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திரிணமூல் காங்கிரஸ் - 31 இடங்களில் முன்னிலை
பாஜக - 10 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் - 1 இடத்தில் முன்னிலை
கடந்த முறை 18 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
மக்களவைத் தேர்தல் 2024
— Kizhakku News (@KizhakkuNews) June 4, 2024
மதியம் 1 மணி நிலவரம்
இந்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை
#LokSabhaElections2024 #LokSabhaElection #ElectionResults2024 #VoteCounting #ElectionsResults #Election2024 #Congress #BJP #KizhakkuNews pic.twitter.com/sRB8SaQukc
மக்களவைத் தேர்தல் 2024
— Kizhakku News (@KizhakkuNews) June 4, 2024
மதியம் 12 மணி நிலவரம்
இந்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை#LokSabhaElections2024 #LokSabhaElection #ElectionResults2024 #VoteCounting #ElectionsResults #Election2024 #Congress #BJP #KizhakkuNews pic.twitter.com/siAbCw7st9
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் யூசுப் பதான் முன்னிலை
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 295 இடங்களில் முன்னிலை
இண்டியா கூட்டணி - 229 இடங்களில் முன்னிலை
மற்றவை - 19 இடங்களில் முன்னிலை
72000 வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி முன்னிலை
திருச்சூர் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி, திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை
காங்கிரஸ் + 43
பாஜக + 36
பிற 1
பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 8 இடங்களில் முன்னிலை
ஹைதராபாதில் அசாதுதீன் ஒவைசி முன்னிலை!
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 291 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் - 224 இடங்களில் முன்னிலை
மற்றவை - 28 இடங்களில் முன்னிலை
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் இண்டியா கூட்டணி 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பாஜக 35 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் இரு இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
சமாஜவாதி 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 62 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் 10 இடங்களில் வெற்றி பெற்றது. சமாஜவாதி 5 இடங்களில் வெற்றி பெற்றது. அப்னா தளம் 2 இடங்களில் வெற்றி பெற்றது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி உத்தரப் பிரதேசத்தில் பாஜக மட்டும் 65 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 69 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.
பாஜக கூட்டணி - 20 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் கூட்டணி - 0
மற்றவை - 5
பாஜக - 57 இடங்களில் முன்னிலை
பிஜூ ஜனதா தளம் - 38 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் - 10 இடங்களில் முன்னிலை
சிபிஐ(எம்) - 1 இடத்தில் முன்னிலை
ஐஎன்டி - 1 இடத்தில் முன்னிலை
தெலுங்கு தேசம் - 116 இடங்களில் முன்னிலை
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 23 இடங்களில் முன்னிலை
ஜனசேனா - 15 இடங்களில் முன்னிலை
பாஜக - 6 இடங்களில் முன்னிலை
பாஜக - 6 இடங்களில் முன்னிலை
இண்டியா கூட்டணி - 1 இடத்தில் முன்னிலை
பாஜக கட்சி - 252 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் - 98 இடங்களில் முன்னிலை
கர்நாடகத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா 1,446 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் 10,423 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி பின்னடைவு.
காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் முன்னிலை வகிக்கிறார்.
வாரணாசியில் ஆரம்பச் சுற்றுகளில் பின்தங்கியிருந்த பிரதமர் மோடி, தற்போது 436 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
வயநாடு, ராய் பரேலி தொகுதிகளில் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை
வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் காரணமாக இந்தியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 2087 புள்ளிகளும் நிஃப்டி 653 புள்ளிகளும் குறைந்துள்ளன.
வயநாட்டில் ராகுல் காந்தி 21,836 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
ரே பரலியில் ராகுல் காந்தி 8,993 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 6 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
பாஜக - 22
திரிணமூல் - 17
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 21
காங்கிரஸ் - 6
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 278
இண்டியா கூட்டணி - 203
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 36
இண்டியா கூட்டணி - 31
இண்டியா கூட்டணி - 25
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 18
மற்றவை - 0
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 279
இண்டியா கூட்டணி - 181
மற்றவை - 17
காலை 8.47 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை
பாஜக - 42
காங்கிரஸ் - 17
ஆம் ஆத்மி - 4
சமாஜவாதி - 2
361/543
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 214
இண்டியா கூட்டணி - 141
மற்றவை - 10
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னிலை நிலவரம்!
பாஜக - 4 இடங்களில் முன்னிலை
நாகா மக்கள் முன்னணி - 1 இடத்தில் முன்னிலை
ஸோரம் மக்கள் இயக்கம் - 1 இடத்தில் முன்னிலை
ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி - 1 இடத்தில் முன்னிலை
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் ரே பரலி தொகுதியில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
சூரத்தில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் ஏற்கெனவே போட்டியின்றித் தேர்வானார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்குள் செல்ஃபோன், லேப்-டாப் உள்ளிட்ட சாதனங்களை எடுத்துச் செல்லத் தடை
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து, 8.30 மணி முதல் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன.