மக்களவைத் தேர்தல்: பிரிஜ் பூஷனின் மகன் பாஜக சார்பில் போட்டி

2019 மக்களவைத் தேர்தலில் பிரிஜ் பூஷன் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பிரிஜ் பூஷனின் மகன் பாஜக சார்பில் போட்டி
பிரிஜ் பூஷனின் மகன் பாஜக சார்பில் போட்டி

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷனின் மகன் கரண் பூஷன் சிங், கெய்சர்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன் விளைவாகவே அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தின் கெய்சர்கஞ்ச் தொகுதியில் 2009 முதல் பிரிஜ் பூஷன் சிங் எம்.பியாக உள்ளார். கடைசியாக நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில், இவர் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் கெய்சர்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரிஜ் பூஷனின் மகன் கரண் பூஷன் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலின் 5- வது கட்டமாக கெய்சர்கஞ்சில் மே 20 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in