தமிழ்நாட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகம் முடிவு

ஜூலை 12 முதல் 31 வரை காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது.
தமிழ்நாட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகம் முடிவு
1 min read

காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் தில்லியில் கடந்த 11 அன்று கூடியது. அப்போது, ஜூலை 12 முதல் 31 வரை காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது. தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டம் இன்று மாலை பெங்களூருவில் கூடியது. கூட்டத்தில் கர்நாடக அணைகளில் உள்ள நீர் நிலவரம் பற்றி அந்த மாநில அதிகாரிகள் விளக்கமளித்திருக்கிறார்கள். இறுதியாக, தமிழ்நாட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு கூட்டத்தில் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in