ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்குக் கூடுதல் பொறுப்பு

தெலங்கான ஆளுநராகவும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் பணியாற்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சி.பி. ராதாகிருஷ்ணன்
சி.பி. ராதாகிருஷ்ணன்@CPRGuv

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் நேற்று ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ராஜினாமா கடிதத்தை அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பினார்.

இந்நிலையில் ராஜினாமா கடிதத்தை திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு பதிலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பொறுப்பை ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என கூறப்பட்டுள்ளது.

மேலும் மாற்று ஏற்பாடு செய்யும்வரை கூடுதல் பொறுப்பில் ராதாகிருஷ்ணன் தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சி.பி. ராதாகிருஷ்ணன் தனது X தளத்தில், “தெலங்கான ஆளுநராகவும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் பணியாற்ற கூடுதல் பொறுப்பை வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in