பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து, லாகூரின் வான் பாதுகாப்பு அமைப்பை தகர்த்த இந்தியா!

லாகூரில் இருந்து வெளியேறுமாறு குடிமக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து, லாகூரின் வான் பாதுகாப்பு அமைப்பை தகர்த்த இந்தியா!
1 min read

ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள 15 இராணுவ நிலைகளை பாகிஸ்தான் தாக்க முயன்றதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை தாக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டு, லாகூரில் வான் பாதுகாப்பு அமைப்பை தகர்த்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை, `ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்கி அழித்தன.

இதைத் தொடர்ந்து, அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அம்ருத்சர், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், ஃபலோடி, உத்தராலி, பூஜ் ஆகிய இடங்களில் உள்ள இந்திய இராணுவ நிலைகளை, டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நேற்றிரவு (மே 7) பாகிஸ்தான் தாக்க முயன்றதாக, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், ஒருங்கிணைந்த எதிர்தாக்குதல் யு.ஏ.எஸ். கட்டம் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட எஸ்-400 `சுதர்சன் சக்ரா’ வான் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன், அந்த பாகிஸ்தானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் செயலிழக்க வைக்கப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

`இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் இருந்த வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் இந்திய பாதுகாப்புப் படைகள் குறிவைத்தன; இதில் லாகூரில் இருந்த வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த செய்தி கிடைத்துள்ளது’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாகூரில் இந்தியா தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து, அங்கிருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது. லாகூரைவிட்டு வெளியேற முடியாத பட்சத்தில் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in