காங்கிரஸிலிருந்து விலகிய கௌரவ் வல்லபா பாஜகவில் இணைந்தார்

சனாதன எதிர்ப்பில் உடன்பாடில்லை என்று காங்கிரஸிலிருந்து விலகினார்.
காங்கிரஸிலிருந்து விலகிய கௌரவ் வல்லபா பாஜகவில் இணைந்தார்
ANI
1 min read

காங்கிரஸிலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லபா இன்று பாஜகவில் இணைந்தார்.

கௌரவ் வல்லப் 2017-ல் காங்கிரஸில் இணைந்தார். கட்சியில் இணைந்தவுடன் தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராகப் பங்கேற்று பிரபலமாக அறியப்பட்டார்.

2019-ல் ஜார்க்கண்டில் ஜாம்ஷெத்பூர் கிழக்கில் போட்டியிட்ட வல்லப், 18 ஆயிரம் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 2023-ல் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் உதய்பூர் தொகுதியில் போட்டியிட்ட இவர், 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவுக்கு எதிராகப் பேசி பிரபலமான இவர், சனாதன எதிர்ப்பில் உடன்பாடில்லை என்று கூறி காங்கிரஸிலிருந்து விலகினார்.

இந்த நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வைத்து பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்தவுடன் அவர் கூறியதாவது:

"இண்டியா கூட்டணியில் உள்ள சில முக்கியத் தலைவர்கள் சனாதனத்துக்கு எதிராக விரும்பத்தகாத கருத்துகளை கருத்துகளை வைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இதற்கு மௌனம் காப்பது எனக்கு வருத்தமளித்தது.

ராமர் கோயில் விவகாரத்தில் எனது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாகவே நான் எதிர்த்தேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in