திரிபுராவில் மதியம் 1 மணி நிலவரப்படி 54.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ல் நடைபெற்றது. ஏறத்தாழ 62 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக திரிபுராவில் மதியம் 1 மணி நிலவரப்படி 54.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக மஹாராஷ்டிரத்தில் 31.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு விவரம்:
அசாம் - 46.31%
பிஹார் - 33.8%
கர்நாடகம் - 38.2%
ஜம்மு-காஷ்மீர் - 42.88%
கேரளம்-39.3%
மத்தியப் பிரதேசம் - 38.96%
உத்தரப் பிரதேசம் - 35.7%
சத்தீஸ்கர் - 53.09%
மேற்கு வங்கம் - 47.3%
மணிப்பூர் - 54.3%
திரிபுரா - 54.47%
மஹாராஷ்டிரம் - 31.77%
ராஜஸ்தான் - 40.4%