கேரளத்தில் நுழைந்தது பாஜக!

கேரளத்தில் முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.
கேரளத்தில் நுழைந்தது பாஜக!
கேரளத்தில் நுழைந்தது பாஜக!ANI

கேரளத்தின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான நடிகர் சுரேஷ் கோபி 73000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. 96.8 கோடி வாக்காளர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருந்த நிலையில், 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் நடைபெற்ற தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கேரளத்தின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான நடிகர் சுரேஷ் கோபி 390133 வாக்குகள் பெற்று 73000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கேரளத்தில் முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

நடிகர் சுரேஷ் கோபி மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில் குமார் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் சுனில் குமார் 318756 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரான முரளிதரன் 308683 வாக்குகள் பெற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in