வாரணாசியில் பிரதமர் மோடி முன்னிலை!

காங்கிரஸ் கட்சி வேட்பாளரான அஜய் ராய்யை விட 23000-க்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
வாரணாசியில் பிரதமர் மோடி முன்னிலை!
வாரணாசியில் பிரதமர் மோடி முன்னிலை!ANI

உத்தரப் பிரதேச மாநில வாரணாசியில் பிரதமர் மோடி 20000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. 96.8 கோடி வாக்காளர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருந்த நிலையில், 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் நடைபெற்ற தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்நிலையில் காலை 10.30 மணி நிலவரப்படி உத்தரப் பிரதேச மாநில வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளரான அஜய் ராய்யை விட 23000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in