மத்தியப் பிரதேசம்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளர்

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சூரத் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தது.
பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளர்
பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளர்@KailashOnline

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காண்டி தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு மே 7 அன்று நடைபெறவுள்ளது. இந்தூரில் மே 13 அன்று மக்களவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காண்டி தனது மனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்துள்ளார்.

இதனிடையே, அக்‌ஷய் காண்டி தனது மனுவை வாபஸ் பெற்றவுடனே, அவரை பாஜகவில் இணையுமாறு பாஜக மூத்த தலைவரும் மத்தியப் பிரேதேச அமைச்சருமான கைலாஷ் விஜய்வர்கியா அழைப்பு விடுத்தார். இந்நிலையில் அக்‌ஷய் காண்டி பாஜகவில் இணைந்துள்ளார்.

மேலும், அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சூரத் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in