கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: தேர்தல் பிரசாரம் நிறைவு

அமித் ஷா, சிவராஜ் சிங் சௌஹான், ஜோதிராதித்ய சிந்தியா, பிரல்ஹாத் ஜோஷி, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மூன்றாம் கட்டத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 94 தொகுதிகளில் இன்று மாலை தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ல் நடைபெற்றது. கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் என 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

கோவாவில் இரு தொகுதிகள், குஜராத்தில் 26 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள் மற்றும் கர்நாடகத்தில் 14 தொகுதிகள் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த 94 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

அமித் ஷா, சிவராஜ் சிங் சௌஹான், ஜோதிராதித்ய சிந்தியா, பிரல்ஹாத் ஜோஷி, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மூன்றாம் கட்டத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in