ஜம்மு காஷ்மீர் அணைகளிலிருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்!

பக்லிஹார், கிஷன்கங்கா அணைகளை முன்வைத்து இரு நாடுகளுக்கும் இடையே முன்பு பிரச்னைகள் எழுந்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் அணைகளிலிருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்!
ANI
1 min read

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் பக்லிஹார், கிஷன்கங்கா அணிகளில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்.22-ல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக உலக வங்கி மேற்கொண்ட மத்யஸ்தத்தின் அடிப்படையில், கடந்த 1960-ல் பாகிஸ்தானுடன் கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா வெளியிட்ட அறிவிப்பை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது. தங்கள் நாட்டிற்குள் தண்ணீர் பாய்வதைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியும் போராகவே கருதப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், சிந்து நதியின் கிளை நதியான செனாப்பிற்கு குறுக்கே அமைந்துள்ள பக்லிஹார் அணையின் மதகுகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த அணையின் மூலம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் பாய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில், கிஷன்கங்கா நதிக்கு மேலே அமைந்துள்ள கிஷன்கங்கா அணையில் இருந்தும் பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2007 மற்றும் 2008-ல் அடுத்தடுத்து பயன்பாட்டிற்கு வந்த பக்லிஹார் மற்றும் கிஷன்கங்கா அணைகளை முன்வைத்து இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னைகள் எழுந்துள்ளன. இந்த இரு அணைகளிலிருந்தும் தேவைப்படும் அளவிற்கு நீரை வெளியேற்றி, தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் இந்தியா நீர் வழித் தாக்குதல் தொடுக்கலாம் என்று பாகிஸ்தான் முன்னதாக குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in