
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து நடிகர் அஜித் பத்ம பூஷன் விருதையும், கிரிக்கெட் வீரர் அஸ்வின் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுக் கொண்டார்கள்.
குடியரசு நாளையொட்டி ஆண்டுதோறும் கலைத் துறை, சமூகப் பணி, அறிவியல், பொறியியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்படும். கடந்த ஜனவரியில் மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. 7 பேருக்கு பத்ம விபூஷன், 10 பேருக்கு பத்ம பூஷன், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 23 பேர் பெண்கள், 10 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டார்கள்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றுக் கொண்டார். அஜித் மனைவி ஷாலினி உள்ளிட்ட குடும்பத்தினர் அஜித் விருது பெறுவதைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்தார்கள்.
கிரிக்கெட் வீரர் அஸ்வினும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றுக் கொண்டார். அஸ்வின் மனைவி பிரீத்தி உள்ளிட்டோர் அவர் விருது பெறுவதைப் பார்த்து உணர்ச்சிவயப்பட்டார்கள்.
சமையல் கலைஞர் தாமோதரன் (செஃப் தாமு) பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டார்.
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பத்ம பூஷன் விருதையும் பாடகர் அரிஜித் சிங் பத்ம ஸ்ரீ விருதையும் திரைக் கலைஞர் ஷேகர் கபூர் பத்ம பூஷன் விருதையும் பெற்றுக் கொண்டார்கள்.