மஹாராஷ்டிரத்தில் 1 மணி நிலவரப்படி குறைந்தபட்சமாக 31.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ல் நடைபெற்றது.
கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் என 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 49.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக மஹாராஷ்டிரத்தில் 31.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு விவரம்:
அசாம் - 45.88%
பிஹார் - 36.69%
கர்நாடகம் - 41.59%
மத்தியப் பிரதேசம் - 44.67%
உத்தரப் பிரதேசம் - 38.12%
சத்தீஸ்கர் - 46.14%
மேற்கு வங்கம் - 49.27%
மஹாராஷ்டிரம் - 31.55%
குஜராத் - 37.83%
கோவா - 49.04%
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டயூ - 39.94%