மக்களவைத் தேர்தல்: 93 தொகுதிகளில் நாளை 3-ம் கட்ட வாக்குப்பதிவு

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI
1 min read

93 தொகுதிகளில் நாளை மக்களவைத் தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ல் நடைபெற்றது.

கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் என 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை நடைபெறவுள்ளது.

கோவாவில் இரு தொகுதிகள், குஜராத்தில் 25 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், மஹாராஷ்டிரத்தில் 11 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 9 தொகுதிகள், பிஹாரில் 5 தொகுதிகள், அசாம், மேற்கு வங்கத்தில் தலா 4 தொகுதிகள் மற்றும் கர்நாடகத்தில் 14 தொகுதிகள் என மொத்தம் 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிவிட்ட காரணத்தால், 25 தொகுதிகளில் மட்டும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in