மக்களவைத் தேர்தல்: 89 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு
நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவுANI

13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ல் நடைபெற்றது. ஏறத்தாழ 62 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை நடைபெறவுள்ளது.

கேரளத்தில் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகள், மஹாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், அசாம் மற்றும் பிஹார் மாநிலத்தில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in