தாழ்வு மனப்பான்மையுடன் விளையாடினேன்: விம்பிள்டன் தோல்வி குறித்து ஜோகோவிச்

“என்னைவிட அனைத்து வகையிலும் அவர் சிறப்பாக விளையாடினார்”.
ஜோகோவிச்
ஜோகோவிச் @TheTennisLetter
1 min read

விம்பிள்டன் இறுதிச் சுற்றில் அல்காரஸ் தன்னைவிட அனைத்து வகையிலும் சிறப்பாக விளையாடினார் என்று ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

விம்பிள்டன் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்.

கடந்த ஆண்டு விம்பிள்டன் இறுதிச் சுற்றிலும் இவர்கள் இருவர்தான் நேருக்கு நேர் மோதினார்கள். இதில் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தப்பின் பேசிய ஜோகோவிச் தான் தாழ்வு மனப்பான்மையுடன் விளையாடிதாகத் தெரிவித்துள்ளார்.

ஜோகோவிச் பேசியதாவது:

“இறுதிச் சுற்றில் தாழ்வு மனப்பான்மையுடன் விளையாடினேன். அவர் மிகச்சிறப்பாக விளையாடினார். அவரின் ஒவ்வொரு ஷாட்டும் நான் அடித்ததைவிட சிறப்பாக இருந்தது. என்னுடைய செர்வில் அவர் அவ்வளவு எளிதாக புள்ளிகளை எடுக்க விடவில்லை. அவர் ஆட்டத்தில் பல்வேறு வித்தியாசங்களை பார்க்க முடிந்தது. இப்படி அவர் செர்வ் செய்து நான் பார்த்ததே இல்லை. மிகவும் வேகமாக இருந்தது. அதற்காக நிறைய பயிற்சிகளை அவர் எடுத்திருப்பார். என்னைவிட அனைத்து வகையிலும் சிறப்பாக விளையாடினார்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in