ரோஹித் சர்மாவை அவமானப்படுத்தினாரா பாண்டியா?: ரசிகர்கள் கொந்தளிப்பு

மும்பை அணியில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரோஹித் சர்மாவை அவமானப்படுத்தினாரா பாண்டியா?
ரோஹித் சர்மாவை அவமானப்படுத்தினாரா பாண்டியா?

ரோஹித் சர்மாவை பாண்டியா அவமானப்படுத்தியதாகவும், மும்பை அணியில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் அணி மும்பையை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின்போது மும்பை அணியின் கேப்டன் பாண்டியா, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பும்ரா இடையே ஒரு சில வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

மும்பை அணியின் கேப்டனாக பாண்டியா செயல்படுவார் என்ற செய்தி வெளியானதில் இருந்தே, மும்பை ரசிகர்கள் பலரும் இம்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடந்த சில தருணங்களைப் பார்க்கும்போது, மும்பை அணியில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முதல் சம்பவம்

இதில் கேப்டன் பாண்டியா, ரோஹித் சர்மாவை பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்யும்படி அறிவுறுத்துகிறார். அதனை பார்க்க மிகவும் காட்டமாக கூறுவதுபோல் இருப்பதால் ரசிகர்கள் கொந்தளித்தனர். பொதுவாக பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்யாத ரோஹித் சர்மாவை இவ்வாறு செய்ததால் ரசிகர்கள் பலரும் பாண்டியாவின் கேப்டன் பதவி குறித்து விமர்சனம் செய்தனர்.

இரண்டாம் சம்பவம்

பும்ரா வீசிய ஒரு ஓவரில் பாண்டியா பும்ராவிடன் எதோ அறிவுரை வழங்க, அருகில் வந்த ரோஹித் சர்மாவும் பும்ராவிடம் பேசுகிறார். இத்தருணத்தில் பாண்டியா அங்கிருந்து விலகிச் செல்கிறார்.

மூன்றாம் சம்பவம்

ஆட்டம் முடிந்தப் பிறகு பாண்டியா ரோஹித் சர்மாவை கட்டியணைக்க, ரோஹித் கோவமாக பாண்டியாவிடம் பேசுகிறார். இதைத் தொடர்ந்து அவர் ஆலோசனை வழங்க அதனை அமைதியாக கேட்கிறார் பாண்டியா.

இந்நிலையில் இவை அனைத்தையும் தொடர்புபடுத்தி, மும்பை அணியில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in