பாண்டியாவைக் கேலி செய்யும் ரசிகர்களைக் கைது செய்ய திட்டமா?: எம்சிஏ விளக்கம்

“இவை அனைத்தும் ஆதாரமற்ற வதந்திகள். பிசிசிஐயின் வழிகாட்டுதல்களை எம்சிஏ தொடர்ந்து பின்பற்றும்”
பாண்டியாவைக் கேலி செய்யும் ரசிகர்களைக் கைது செய்ய திட்டமா?: எம்சிஏ விளக்கம்
ANI

பாண்டியாவைக் கேலி செய்யும் ரசிகர்கள் கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியான நிலையில், இது தொடர்பான விளக்கத்தை மும்பை கிரிக்கெட் சங்கம் அளித்துள்ளது.

மும்பை அணியின் கேப்டனாக பாண்டியா செயல்படுவார் என்ற செய்தி வெளியானதில் இருந்தே, மும்பை ரசிகர்கள் பலரும் இம்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ரோஹித் சர்மாவை பாண்டியா அவமானப்படுத்தியதாகவும், மும்பை அணியில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் மும்பை அணி தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் பாண்டியா விளையாட வந்த நிலையில் அவருக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டனர். அவர் டாஸ் போட வரும் சமயத்திலும் இதேபோல ஒரு சம்பவம் நடந்தது.

இந்நிலையில் பாண்டியாவைக் கேலி செய்யும் ரசிகர்கள் கைது செய்யப்படுவார்கள் என எம்சிஏ அறிவித்ததாகத் தகவல் வெளியான நிலையில் இது தொடர்பான விளக்கத்தை மும்பை கிரிக்கெட் சங்கம் அளித்துள்ளது.

இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகி ஒருவர், “இவை அனைத்தும் ஆதாரமற்ற வதந்திகள். பிசிசிஐயின் வழிகாட்டுதல்களை எம்சிஏ தொடர்ந்து பின்பற்றும்” என கூறியதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in