டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

டு பிளெஸ்ஸி மீண்டும் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தேர்வு செய்யப்படவில்லை.
தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
தென்னாப்பிரிக்க அணி அறிவிப்புANI

டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்ரம் தலைமையிலான அணியில் இரண்டு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல்-ல் அசத்திவரும் கிளாசன், கூட்ஸியா, ஸ்டப்ஸ் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் 9 மாதங்களுக்குப் பிறகு நார்க்கியா சர்வதேச அணியில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த எஸ்ஏ டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்தவரும், சமீபத்தில் முடிவடைந்த சிஎஸ்ஏ டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்தவருமான ரிக்கெல்டனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் எஸ்ஏ டி20 போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடி 520 ரன்கள் எடுத்தார்.

மேலும், இப்போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்திய பார்ட்மனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க வீரரும், ஆர்சிபி அணியின் கேப்டனுமான டு பிளெஸ்ஸி மீண்டும் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தேர்வு செய்யப்படவில்லை.

டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி: மார்க்ரன் (கேப்டன்), பார்ட்மன், கூட்ஸியா, டி காக், ஃபார்டுயின், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், யான்சென், கிளாஸன், கேஷவ் மஹாராஜ், மில்லர், நார்க்கியா, ரபாடா, ரிக்கெல்டன், ஷம்சி, ஸ்டப்ஸ்.

மாற்று வீரர்கள்: பர்கர், இங்கிடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in