சேலத்தில் புச்சி பாபு கிரிக்கெட் போட்டி: சூர்யகுமார் யாதவ் பங்கேற்பு!

"நேரம் கிடைக்கும் போதெல்லாம் மும்பை அணிக்காக விளையாடுவேன்”
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் ANI
1 min read

சேலத்தில் நடைபெறவுள்ள புச்சி பாபு கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்கவுள்ளார்.

நடப்பாண்டு புச்சி பாபு போட்டி ஆகஸ்ட் 15 அன்று தொடங்குகிறது.

ஆகஸ்ட் 27 அன்று சேலத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மும்பை, ஜம்மு - காஷ்மீர் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதில் இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் பங்கேற்கவுள்ளார். 17 பேர் கொண்ட மும்பை அணியை சர்ஃபராஸ் கான் வழிநடத்தவுள்ளார்.

இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியதாவது: “நான் புச்சி பாபு போட்டியில் விளையாடுவேன். உள்ளூர் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு இது நல்ல பயிற்சியாக அமையும்.

ஆகஸ்ட் 25-க்குப் பிறகு அணியில் இணைவேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மும்பை அணிக்காக விளையாடுவேன்” என்றார்.

மேலும், மும்பை அணிக்கு சர்ஃபராஸ் கானே கேப்டனாகத் தொடரட்டும், நான் ஒரு வீரராக மட்டுமே விளையாடுவேன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in