ஸ்ரீசாந்துக்குத் தடை: கேரள கிரிக்கெட் சங்கம்

ஏப்ரல் 30 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

பொய் மற்றும் இழிவான கருத்துகளைத் தெரிவித்ததற்காக கிரிக்கெட் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட ஸ்ரீசாந்துக்கு கேரள கிரிக்கெட் சங்கம் மூன்றாண்டுகள் தடை விதித்துள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை போட்டியை ஒட்டி, சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார் ஸ்ரீசாந்த். விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாததால், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான அணித் தேர்வில் சாம்சனைத் தேர்வு செய்ய பிசிசிஐ முன்வரவில்லை என்ற ரீதியில் ஸ்ரீசாந்த் பேசியிருந்தார்.

மேலும், மற்ற வீரர்களுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவிக்கும் விதமாக கேரள கிரிக்கெட் சங்கத்திலிருந்து தேசிய அணியில் இடம்பிடிக்கும் அளவுக்குப் பெரிய வீரர்கள் யாரும் உருவாக்கப்படவில்லை என்பது போன்ற கருத்தையும் முன்வைத்திருந்தார் ஸ்ரீசாந்த். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ஸ்ரீசாந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சஞ்சு சாம்சன் உள்ளிட்டோருக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்ததற்காக நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. மாநில கிரிக்கெட் அமைப்பு குறித்து தவறான மற்றும் இழிவான கருத்துகளை முன்வைத்ததற்காகவே நோட்டீஸ் என கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30 அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், அனைத்து விதமான கிரிக்கெட் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட ஸ்ரீசாந்துக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்க கேரள கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. கேரள கிரிக்கெட் லீகில் கொல்லம் ஏரிஸ் அணியின் இணை உரிமையாளராக ஸ்ரீசாந்த் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in