
பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
பிசிசிஐயின் 2024-25 பருவத்துக்கான (அக்டோபர் 1, 2024 - செப்டம்பர் 30, 2025) வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தம் குறித்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
மொத்தம் 34 வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளார்கள். இதில் ஏ+ பிரிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். கடந்தாண்டு போட்டப்பட்ட மத்திய ஒப்பந்தத்தில் ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இருவரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ரிஷப் பந்த் ஏ பிரிவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா, துருவ் ஜுரெல், சர்ஃபராஸ் கான், ஆகாஷ் தீப் உள்ளிட்ட இளம் வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
ஷார்துல் தாக்குர், கேஎஸ் பரத், அவேஷ் கான் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் கடந்தாண்டு சி பிரிவில் இடம்பெற்றிருந்தார்கள். இவர்கள் புதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை.
ஏ+ பிரிவு:
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா
ஏ பிரிவு:
முஹமது சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், ஹார்திக் பாண்டியா, முஹமது ஷமி, ரிஷப் பந்த்
பி பிரிவு:
சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், யஷஸ்வி ஜெயிஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர்
சி பிரிவு:
ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெயிக்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னாய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் படிதார், துருவ் ஜுரெல், சர்ஃபராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
ஆண்டு ஊதியம்
ஏ+ பிரிவு: ரூ. 7 கோடி
ஏ பிரிவு: ரூ. 5 கோடி
பி பிரிவு: ரூ. 3 கோடி
சி பிரிவு: ரூ. 1 கோடி