ஐபிஎல் மெகா ஏலம்: 2-வது நாளில் சிஎஸ்கே தேர்வு செய்த வீரர்கள்!

ஏற்கெனவே 2020, 2021 ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய சாம் கரணை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம்: 2-வது நாளில் சிஎஸ்கே தேர்வு செய்த வீரர்கள்!
1 min read

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது நாளில் சிஎஸ்கே அணி முதல் வீரராக சாம் கரணை ரூ. 2.40 கோடிக்குத் தேர்வு செய்தது. ஏற்கெனவே 2020, 2021 ஐபிஎல் போட்டிகளில் சாம் கரண் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார்.

இதன் பிறகு ஷேக் ரஷீதை ரூ. 30 லட்சத்துக்கும், சமீபத்தில் ரஞ்சி கோப்பையில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அன்ஷுல் கம்போஜை ரூ. 3.40 கோடிக்கும் சிஎஸ்கே அணி தேர்வு செய்தது.

2-வது நாளில் சிஎஸ்கே தேர்வு செய்த வீரர்கள்:

அன்ஷுல் கம்போஜ் - ரூ. 3.40 கோடி

சாம் கரண் - ரூ. 2.40 கோடி

குர்ஜப்நீத் சிங் - ரூ. 2.20 கோடி

நாதன் எலிஸ் - ரூ. 2 கோடி

தீபக் ஹூடா - ரூ. 1.70 கோடி

ஜேமி ஓவர்டன் - ரூ. 1.70 கோடி

வன்ஷ் பேடி - ரூ. 55 லட்சம்

ஆண்ட்ரே சித்தார்த் - ரூ. 30 லட்சம்

ஷேக் ரஷீத் - ரூ. 30 லட்சம்

முகேஷ் சௌதரி - ரூ. 30 லட்சம்

கம்லேஷ் நாகர்கோட்டி - ரூ. 30 லட்சம்

ராமகிருஷ்ண கோஷ் - ரூ. 30 லட்சம்

ஸ்ரேயஸ் கோபால் - ரூ. 30 லட்சம்

முதல் நாளில் சிஎஸ்கே தேர்வு செய்த வீரர்கள்:

நூர் அஹமது - ரூ. 10 கோடி

அஸ்வின் - ரூ. 9.75 கோடி

டெவான் கான்வே - ரூ. 6.25 கோடி

கலீல் அஹமது - ரூ. 4.80 கோடி

ரச்சின் ரவீந்திரா - ரூ. 4 கோடி

ராகுல் திரிபாதி - ரூ. 3.40 கோடி

விஜய் சங்கர் - ரூ. 1.20 கோடி

சிஎஸ்கே தக்கவைத்துக்கொண்ட வீரர்கள்: ருதுராஜ் கெயிக்வாட் (ரூ. 18 கோடி), பதிரனா (ரூ. 13 கோடி), ஷிவம் துபே (ரூ. 12 கோடி), ஜடேஜா (ரூ. 18 கோடி), தோனி (ரூ. 4 கோடி).

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in