ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் பறிகொடுத்த வீரர்கள்!

பஞ்சாப் அணி 19 வீரர்களை எதிரணிகளிடம் இழந்தது.
ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் பறிகொடுத்த வீரர்கள்!
ANI
1 min read

ஐபிஎல்லில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணி ஏலத்தில் அதிகபட்சமாக 23 வீரர்களை தேர்வு செய்தது. இருப்பினும் 19 வீரர்களை எதிரணிகளிடம் இழந்தது.

முகேஷ் குமார், மெக்கர்க், ஹாரி புரூக், அஷுடோஷ் சர்மா ஆகியோருக்காக முறையே ரூ. 8 கோடி, ரூ. 9 கோடி, ரூ. 6 கோடி, ரூ. 3.6 கோடி வரை சென்றிருந்தாலும், நான்கு பேரையும் தில்லியிடம் கோட்டைவிட்டது பஞ்சாப்.

வெளிநாட்டு வீரர்களான ரச்சின் ரவிந்திரா, கான்வே மற்றும் நேதன் எலிஸ் ஆகியோரை சிஎஸ்கேவிடம் பறிகொடுத்த பஞ்சாப், அவர்களுக்காக முறையே ரூ. 4 கோடி, ரூ. 6 கோடி, ரூ. 1.6 கோடி வரை முயற்சித்தது.

சாய் கிஷோர், ஜெரால்டு கோட்ஸியா மற்றும் அர்ஷத் கானைத் தேர்வு செய்ய முயற்சி செய்தும், அவர்களை குஜராத்திடம் இழந்தது பஞ்சாப். ஆகாஷ் தீப், அப்துல் சமத் ஆகியோருக்காக பஞ்சாப் முறையே ரூ. 7.75 கோடி, ரூ. 4 கோடி வரை போட்டியிட்டும், இறுதியில் அவர்களை லக்னௌ அணி தேர்வு செய்தது.

ஜேகப் பெத்தல் மற்றும் ஜிதேஷ் சர்மாவை தேர்வு செய்தது ஆர்சிபி. அவர்களுக்காக முறையே ரூ. 2.4 கோடி, ரூ. 7 கோடி வரை சென்று பார்த்தது பஞ்சாப்.

ஹர்ஷல் படேல், இஷான் கிஷனுக்காக கடைசி வரை போராடியும் சன்ரைசர்ஸ் அணியிடம் இழந்த பஞ்சாப் அணி ஆகாஷ் மத்வால், வில் ஜேக்ஸ், ஸ்பேன்ஸர் ஜான்சன் ஆகியோரையும் எதிரணிகளிடம் கோட்டைவிட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in