மகளிர் டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்ரீஜா அகுலா தகுதி பெற்றுள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 4-2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்ரீஜா அகுலா தகுதி பெற்றுள்ளார்.
மேலும், ஒலிம்பிக்ஸில் டேபிஸ் டென்னிஸ் விளையாட்டில் இந்த நிலையை எட்டிய 2-வது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
முன்னதாக, இந்திய வீராங்கனை மனிகா பத்ரா ஒலிம்பிக்ஸில் டேபிஸ் டென்னிஸ் விளையாட்டில் இந்த நிலையை எட்டிய முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார்.