நார்வே செஸ் தொடர்: உலக சாம்பியன் லிரனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

ஏற்கெனவே, உலகின் நெ.1 செஸ் வீரரான கார்ல்சனையும், நெ.2 செஸ் வீரரான ஃபாபியானோவையும் வீழ்த்தினார்.
பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா@ChessbaseIndia

நார்வே செஸ் தொடரின் 7-வது சுற்றில், பிரக்ஞானந்தா நடப்பு உலக சாம்பியன் லிரனை வீழ்த்தியுள்ளார்.

நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியன் டிங் லிரன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இத்தொடரின் 7-வது சுற்றில் பிரக்ஞானந்தா நடப்பு உலக சாம்பியன் லிரனை வீழ்த்தியுள்ளார். ஏற்கெனவே, உலகின் நெ.1 செஸ் வீரரான கார்ல்சனையும், நெ.2 செஸ் வீரரான ஃபாபியானோவையும் வீழ்த்தினார். ‘கிளாசிகல்’ முறையில் இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து ஆர்மகெடான் முறையில் லிரனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. இந்த வெற்றியைத் தொடர்ந்து 7-வது சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா.

9 சுற்றுகள் கொண்ட இத்தொடரில் இன்னும் 2 சுற்றுகள் மீதமுள்ளன. அடுத்த சுற்றில் நெ.1 செஸ் வீரரான கார்ல்சனை மீண்டும் எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in