சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் முஸ்தபிஸுர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.
ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 22 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 ஆட்டங்கள் முடிந்த நிலையில் சிஎஸ்கே அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் தனது அடுத்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் அணியுடன் மார்ச் 5 அன்று விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் முஸ்தபிஸுர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைகாக விசா பெறுவது தொடர்பான வேலை இருப்பதால் முஸ்தபிஸுர் வங்கதேசத்துக்கு சென்றுள்ளார்.
எனவே சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அவர் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. அவருக்கு பதிலாக மற்றொரு வெளிநாட்டு வீரராக தீக்ஷனா அல்லது மொயீன் அலிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
முஸ்தபிஸுர் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆர்சிபிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார் முஸ்தபிஸுர்.