மும்பையில் முதல் வீரராக பும்ரா தக்கவைப்பு

சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா தலா ரூ. 16.35 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
மும்பையில் முதல் வீரராக பும்ரா தக்கவைப்பு
1 min read

மும்பை இந்தியன்ஸில் ஜஸ்பிரித் பும்ரா முதல் வீரராக ரூ. 18 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2025-க்கு முன்பு நவம்பர், டிசம்பரில் வீரர்கள் மெகா ஏலம் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அதிகபட்சம் தலா 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு, அணி நிர்வாகங்கள் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்க இன்றே (அக்டோபர் 31) இறுதிநாள். இதன்படி, இன்று மாலை 5.30 மணி முதல் ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகத் தொடங்கின.

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸில் 5 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

  1. ஜஸ்பிரித் பும்ரா - ரூ. 18 கோடி

  2. சூர்யகுமார் யாதவ் -ரூ. 16.35 கோடி

  3. ஹார்திக் பாண்டியா - ரூ. 16.35 கோடி

  4. ரோஹித் சர்மா - ரூ. 16.30 கோடி

  5. திலக் வர்மா - ரூ. 8 கோடி

இஷான் கிஷன், டிம் டேவிட், ஜெரால்டு கோட்ஸியா, நேஹால் வதேரா உள்ளிட்டோர் தக்கவைக்கப்படவில்லை.

ஐபிஎல் ஏலத்துக்கு மொத்தமுள்ள ரூ. 120 கோடியில் மும்பை இந்தியன்ஸிடம் இன்னும் ரூ. 55 கோடி மீதமுள்ளது. ஐபிஎல் ஏலத்தின்போது, மும்பை இந்தியன்ஸ் ஆர்டிஎம் முறையில் ஒருவரைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in