பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர் செய்யும் கௌதம் அதானி

பிரக்ஞானந்தாவுடன் கௌதம் அதானி
பிரக்ஞானந்தாவுடன் கௌதம் அதானிபடம்: https://twitter.com/gautam_adani
1 min read

தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர் செய்யவுள்ளதாக அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி அறிவித்துள்ளார்.

12 வயதிலேயே இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்ற பிரக்ஞானந்தா, 2023 உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார். உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இளம் செஸ் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த நிலையில், அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்துள்ளார்.

சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கௌதம் அதானி, உலக செஸ் அரங்கில் இந்தியாவைப் பெருமைப்படுத்தும் பிரக்ஞானந்தாவுடன் துணை நிற்பது எனக்குக் கிடைத்த பாக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரக்ஞானந்தாவுடன் துணை நிற்பதற்காக கௌதம் அதானிக்கு, பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளரும் துரோணாச்சார்யா விருது அறிவிக்கப்பட்டுள்ளவருமான ரமேஷ் எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in