
சென்னை சூப்பர் கிங்ஸில் எம்எஸ் தோனி ரூ. 4 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025-க்கு முன்பு நவம்பர், டிசம்பரில் வீரர்கள் மெகா ஏலம் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அதிகபட்சம் தலா 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு, அணி நிர்வாகங்கள் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்க இன்றே (அக்டோபர் 31) இறுதிநாள். இதன்படி, இன்று மாலை 5.30 மணி முதல் ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகத் தொடங்கின.
சென்னை சூப்பர் கிங்ஸில் 5 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
ருதுராஜ் கெயிக்வாட் - ரூ. 18 கோடி
மதீஷா பதிரனா - ரூ. 13 கோடி
ஷிவம் துபே - ரூ. 12 கோடி
ரவீந்திர ஜடேஜா - ரூ. 18 கோடி
எம்எஸ் தோனி - ரூ. 4 கோடி
ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, மொயீன் அலி, தீபக் சஹார் உள்ளிட்ட வீரர்கள் தக்கவைக்கப்படவில்லை.
சிஎஸ்கேவிடம் ரூ. 65 கோடி மீதமுள்ளது. ஐபிஎல் ஏலத்தின்போது ஆர்டிஎம் முறையில் ஒருவரைத் தேர்வு செய்யலாம்.