சென்னை ஐபிஎல் தொடக்க விழாவில் ஹிந்தி ஆதிக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி!

நம் ஊர் ஏ.ஆர். ரஹ்மானும் தாய் மண்ணே வணக்கம் பாடலை ஹிந்தியில் பாடியது...
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடக்க விழாவில் ஹிந்தியின் ஆதிக்கம் மேலோங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2024 சென்னை சேப்பாக்கத்தில் தொடக்க விழாவுடன் இன்று தொடங்கியது. கடந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றதால், நடப்பு ஐபிஎல் பருவம் சேப்பாக்கத்தில் தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதுகின்றன. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப், பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், சோனு நிகம், பாடகர்கள் மோஹித் சௌஹான், நீத்தி மோகன் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹிந்தி மொழியில் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாடல்களிலும் ஹிந்தியின் ஆதிக்கமே இருந்தது. நம் ஊர் ஏ.ஆர். ரஹ்மானும் தாய் மண்ணே வணக்கம் பாடலை ஹிந்தியில் பாடியது சேப்பாக்கம் மைதானத்தில் கூடியிருந்த தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in