
ஐபிஎல் 2025 போட்டியின் லீக் சுற்றில் இன்னும் 12 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் ஒரு வாரத்துக்கு போட்டி நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு அடுத்து இந்திய, பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவின் கூட்டத்தில் 10 அணிகளின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் - தில்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தக்க சமயத்தில் புதிய அட்டவணை வெளியிடப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.