உணவு இடைவேளை: ஆகாஷ் தீப் அசத்தல், வங்கதேசம் நிதான ஆட்டம்!

ஆட்டமிழக்காமல் ஷாண்டோ 28 ரன்களும், மோமினுல் ஹக் 17 ரன்களும் எடுத்துள்ளனர்.
உணவு இடைவேளை: ஆகாஷ் தீப் அசத்தல், வங்கதேசம் நிதான ஆட்டம்!
ANI
1 min read

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் உணவு இடைவேளையில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் இன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஸாகிர் ஹசன் 24 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆகாஷ் தீப் பந்தில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ஷாட்மன் இஸ்லாம் நிதானமாக விளையாடி 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் டெஸ்டை போல, இந்த டெஸ்டின் தொடக்கத்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஆகாஷ் தீப். இதனால் 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது வங்கதேச அணி.

இதன் பிறகு கேப்டன் ஷாண்டோ மற்றும் மோமினுல் ஹக் கூட்டணி அமைத்தனர். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல் நாள் உணவு இடைவேளையில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது வங்கதேச அணி. ஆட்டமிழக்காமல் ஷாண்டோ 28 ரன்களும், மோமினுல் ஹக் 17 ரன்களும் எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in