இந்திய அணி தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு!

இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கை செல்கிறது.
இந்திய அணி தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு!
இந்திய அணி தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு!ANI
1 min read

இந்தியா - இலங்கை தொடருக்கான தேர்வுக்குழுக் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் ஜூலை 19-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கை செல்கிறது. இத்தொடர் ஜூலை 27 அன்று தொடங்கி ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ளது.

டி20 ஆட்டங்கள் அனைத்தும் பல்லேகலேவிலும், ஒருநாள் ஆட்டங்கள் அனைத்தும் கொழும்புவிலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை தொடருக்கான தேர்வுக்குழுக் கூட்டம் ஜூலை 19 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இது. இதில் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்படுவார்? என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in