ஐபிஎல் 2024: ஹாரி புரூக் விலகல்!

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் புரூக் விலகியிருந்தார்.
ஐபிஎல் 2024: ஹாரி புரூக் விலகல்!
ANI

ஐபிஎல் 2024 போட்டியிலிருந்து இங்கிலாந்து பேட்டர் ஹாரி புரூக் விலகியுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து பேட்டர் ஹாரி புரூக்கை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்திருந்தது தில்லி கேபிடல்ஸ் அணி. இந்நிலையில் சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியிலிருந்து ஹாரி புரூக் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாற்று வீரரைத் தேடவேண்டிய நிலைமை தில்லி அணிக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் புரூக் விலகியிருந்தார்.

ஏலத்தில் தேர்வாகி, ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கும் முன்பு ஏதோ சில காரணங்களுக்காக வீரர்கள் விலகுவது விவாதத்தை உருவாக்கியுள்ளது. வீரர்களின் திடீர் விலகலால் அணிகளின் திட்டங்கள் பாதிக்கப்படுவதால் இதுகுறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கடந்த வருடம் சன்ரைசர்ஸ் அணியால் ரூ. 13.25 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்ட புரூக், மொத்தமாக 190 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். இதனால் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஏலத்தில் தில்லி அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in